ரிஷாப் பன்ட் நம்பிக்கை | ஜனவரி 16, 2023
மும்பை: இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர்/ பேட்டர் ரிஷாப் பன்ட் 25. கடந்த டிச. 30ல் கார் விபத்தில் காயமடைந்தார். மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவரது வலது முழங்கால், கணுக்காலில் சேர்த்து 3 ‘ஆப்பரேஷன்’ செய்யப்பட்டது. இவர் போட்டிக்கு திரும்ப ஓராண்டு தேவைப்படலாம்.
ரிஷாப் பன்ட் கூறுகையில், ‘‘‘ஆப்பரேஷன்’ வெற்றிகரமாக முடிந்தது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. மீண்டு வருவதற்கான பயணத்தை துவக்கிவிட்டேன். எதிர்வரும் சவால்களை சந்திக்க தயாராக உள்ளேன். பி.சி.சி.ஐ., நிர்வாகிகள், பிசியோதெரபிஸ்ட், ரசிகர்கள், சகவீரர்களுக்கு நன்றி. விரைவில் களத்தில் சந்திப்போம்,’’ என்றார்.